"விக்டர் கதாபாத்திரம் போல் மீண்டும் ஒரு கதாபாத்திரம் கிடைத்தால்.." – அருண் விஜயின் ஆசை!

மதுரை சார்ந்த கதைகளில் நடிக்க ஆசை என சினம் படம் டிரெய்லர் வெளியீட்டுக்கு பின் நடிகர் அருண் விஜய் பேட்டியளித்தார்.

ஜி.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் ,பல்லக் லால்வாணி, காளி வெங்கட் நடிப்பில் உருவான சினம் திரைப்படம் செப்டம்பர் 16ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், மதுரை தங்க ரீகல் தியேட்டரில் அதன் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது.

இதில் நடிகர் அருண ;விஜய், பல்லாக் லால்வாணி, காளி வெங்கட் ஆகியோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய் பேசும்போது…

image

ஒவ்வொரு மனிதருக்கும் சினம் வரும், சிலருக்கு சமூகத்தின் மீது கோபம் ஏற்படும் இந்த படத்தில் கோபத்திற்கான நியாயம் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும். திருநெல்வேலி வட்டாரம் சார்ந்த படத்தில் நடித்துள்ளேன் நீண்ட நாளாக மதுரையை பின்னணியாகக் கொண்ட கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. கூடிய விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.

image

விக்டர் கதாபாத்திரம் போல் மீண்டும் ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் அஜித் போன்ற முன்னணி கதாநாயகருடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். சொந்த தயாரிப்பில் நடிப்பது கடினம்தான் அதையும் தாண்டி நல்ல படம் கொடுக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்க திட்டம் இருக்கிறது என்றார்.

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,790FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles