விக்ரமை காண குவிந்த கூட்டம் : நெரிசலில் சிக்கி 3 மாணவர்கள் மயக்கம்

விக்ரமை காண குவிந்த கூட்டம் : நெரிசலில் சிக்கி 3 மாணவர்கள் மயக்கம்

24 ஆக, 2022 – 12:01 IST

எழுத்தின் அளவு:


மதுரையில் நடந்த நடிகர் விக்ரமின் ‛கோப்ரா’ பட புரமோஷன் நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 3 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள ‛கோப்ரா’ படம் ஆக., 31ல் வெளியாகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக மதுரையில் கல்லூரி ஒன்றுக்கு வந்தார் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி உள்ளிட்ட படக்குழுவினர். மாலை 4.30 மணிக்கு நடிகர் விக்ரம் வருவதாக கூறிய நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர்.

இதனால் மாலை முதலே மாணவர்களிடையே கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து மாலை 6.45மணியளவில் விழாவிற்காக கல்லூரி வளாகத்திற்கு நடிகர் விக்ரம் மற்றும் நடிகைகள் வருகை தந்தனர். அப்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 3 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை சக மாணவர்களே கடும் சிரம்ப்பட்டு தூக்கி சென்று ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்த நிகழ்ச்சியில் போதிய முன்னேற்பாடு இல்லாத நிலையில் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,873FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles