பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்து தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றவியில் தண்டனை சட்டத்தின் பிரிவு 41 ஏ என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் வாரண்ட் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். இவை தவிர இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 153 மற்றும் 505 (ஐ)(பி), தகவல் தொடர்புச் சட்டத்தின் பிரிவு 66 டி உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நிர்மல் குமார், “எனக்கு கடந்த திங்கட்கிழமை நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில் நான் என்ன குற்றம் செய்தேன் என்பது தொடர்பாக தெளிவாக இல்லை. என் மீது தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக நான் வரும் 8-ஆம் தேதி காவல்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google Information -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
யூடியூபில் வீடியோக்களை காண